சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை...

published 1 year ago

சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை...

கோவை: கோவை சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் சக்கரை செட்டியார் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மல்லிகா (54). 

இவர்கள் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து 10 நாட்கள் கழித்து கோவை திரும்பினர்.

வீட்டுக்கு வந்து பார்த்தப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா உள்ளே சென்று பார்த்தப்போது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6.50 லட்சம் மதிப்பிலான 16 பவுன் தங்க நகைகளை காணாமல் போனது தெரிந்தது.

வீட்டில் சில நாட்களாக ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் குறித்து மல்லிகா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe