பொள்ளாச்சியில் விவசாயியின் மோட்டார் சைக்கிள் திருட்டு நண்பர்கள் 2 பேர் கைது.

published 2 years ago

பொள்ளாச்சியில் விவசாயியின் மோட்டார் சைக்கிள் திருட்டு நண்பர்கள் 2 பேர் கைது.

கோவை, ஜூன்.3-
பொள்ளாச்சி அடுத்த மலையாண்டி பட்டினம் கொட்டூர் உள்ளாஸ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 40). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கோட்டூர் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றார்.
மாயமாகி பின்னர் அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார் ஆனால் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் கோட்டூர் கோலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று போலீசார் கோட்டூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்  பிரபுவின் மோட்டார் சைக்கிள் என்பதும், அவர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜபாண்டியன் (29) மற்றும் அவரது நண்பர் சேவகமூர்த்தி (20) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe