பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்

published 1 year ago

பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்

கோவை : கோவை பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய புரோக்கரை கைது செய்த போலீசார் இளம்பெண்ணை மீட்டனர்.

கோவையை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் நேற்று பீளமேடு சிட்ரா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றார். 

அப்போது அங்கிருந்த ஒரு நபர் நீங்கள் அதிகமாக பணம் கொடுத்தால் அழகியுடன் ஜாலியாக இருக்கலாம் என விபசாரத்துக்கு அழைப்பு விடுத்தார். 

இது குறித்து அந்த வாலிபர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் குறிப்பிட்ட மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். 

அதில், அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர் கோவை வீரகேரளத்தை சேர்ந்த மாரிமுத்து(37) என்பவரை கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 24 வயது இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரை ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe