தமுமுக தலைவர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து.. கோவையில் வாலிபர் கைது

published 1 year ago

தமுமுக தலைவர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து.. கோவையில் வாலிபர் கைது

கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கரும்புக்கடை அன்பு நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஜூபைர் அஹமத்(24). தமுமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர். இவர் கோவை கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதில், கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த முகமத் ஹரீஸ்(25) என்பவர் அவரது பேஸ்புக் பக்கத்தில், தமுமுக தலைவர் ஜவாருஹில்லா எம்எல்ஏ குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளார். 

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் ஜூபைர் அஹமத்தின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தனர். அதில், அவர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறான கருத்துகளை பதிவு செய்திருந்தார். 

இதனையடுத்து போலீசார் அவர் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் முக ஸ்டாலின், பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக பெண் பிரமுகர் உமா கார்கி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe