கடனை திருப்பி கொடுக்காத ஆத்திரத்தில் வீடு புகுந்து  தாக்கிய  கும்பல் போலீசார் கைது..!

published 1 year ago

கடனை திருப்பி கொடுக்காத ஆத்திரத்தில் வீடு புகுந்து  தாக்கிய  கும்பல் போலீசார் கைது..!

 
கோவை: கடனை திருப்பி கொடுக்காத ஆத்திரத்தில் வீடு புகுந்து கட்டிடத் தொழிலாளியைத் தாக்கிய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மைல்கல் இட்டேரி வீதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (32). கட்டிடத் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கரை அறிவொளி நகரைச் சேர்ந்த முத் அலி (24), என்பவரிடம் ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை திருப்பி கொடுக்காமல் சண்முகராஜ் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சண்முகராஜூக்கும், முத் அலிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சண்முகராஜ் வீட்டில் இருந்தார். 

அப்போது அங்கு வந்த போது முத் அலி உட்பட 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சன்முகராஜிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி சண்முகராஜை இரும்பு கம்பி, பாட்டில் ஆகியவற்றால் சரமாரியாகத் தாக்கி மிரட்டி விட்டுச் சென்றனர்.

இதில் சண்முகராஜுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சண்முகராஜை தாக்கியது மதுக்கரை அறிவொளி நகரைச் சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி முத் அலி (24), அவரது அண்ணன் டிரைவர் ஜின்னா (30), மணிகண்டன்(29), பெயிண்டர் கார்த்திக் (39) என்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe