கோவை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்..!

published 1 year ago

கோவை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்..!

 கோவை: கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவரது மகன் ஜாகீர் (18). இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு உக்கடம் ஜி.எம்., நகரில் உள்ள செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

 புறா வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஜாகீர் அதே ஹவுசிங் யூனிட்டில் உள்ள மொட்டை மாடியில் புறா வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் புறாவை பார்த்து விட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தார்.

 அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில், அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe