ஓடும் ரயிலில் ஏறிய வாலிபர் கால் முறிந்தது

published 1 year ago

ஓடும் ரயிலில் ஏறிய வாலிபர் கால் முறிந்தது

கோவை : ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபரின் கால் முறிந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் தீபக், 18. இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார்.

பின் நண்பரை பார்த்து விட்டு திண்டுக்கல் செல்வதற்காக நேற்று காலை கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு அம்பாத்துறைக்கு டிக்கெட் எடுத்து விட்டு, 6-வது நடைமேடைக்கு வந்தார். அப்போது அவர் செல்ல இருந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. 

அதனை பார்த்த தீபக், ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் கால் தவறி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே மாட்டி கொண்டார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பயணிகள் ஓடி சென்று தீபக்கை அங்கிருந்து வெளியே இழுத்து மீட்டனர். இதில் தீபக்கின் வலது கால், எலும்பு முறிந்தது. 

இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe