கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவுன்சிலர்..!

published 2 years ago

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவுன்சிலர்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை: கோவையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி வருவது வரவேற்பை பெற்றுள்ளது


இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு நுழைவுநிலை வகுப்பு (LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை) இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 41-வது வார்டு பி.என். புதூர் மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன் மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்.

நேற்று முல்லை நகர் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் துண்டுப்பிரசுரம் வழங்கி இலவசக் கல்வி குறிப்பு எடுத்து கூறினர்.

இதில் கம்யூனிஸ்டுக் கட்சி பி.என்.புதூர் கிளை செயலாளர் சந்திரன், சுஜித் குமார், அப்துல் சமது, குமாரசாமி, சத்யா, ஞானபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe