வானதி சீனிவாசன் மீது காவல் நிலையத்தில் புகார்

published 1 year ago

வானதி சீனிவாசன் மீது காவல் நிலையத்தில் புகார்

வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாக பேசிய, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர்கள் அணியினர் பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக.,வினர் கூறியதாவது: 

கோவையில் 29 ஆம் தேதி விகேகே மேனன் சாலையில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்  திமுக கவுன்சிலர்கள் பற்றியும், எம்.எல்.ஏ க்களை பற்றியும்  பேசி இருந்தார். "திமுக கவுன்சிலர் மற்றும் எம்எல்ஏ க்கள் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள், திமுகவிற்காக ஒரு பண்பாடு வைத்துள்ளார்கள், அவர்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், அது அவர்களின் ஜீன்" என பேசி இருந்தார். 

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் திமுக கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய  வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் கோவை மாவட்டம் முழுவதும் திமுக பகுதி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe