கோவையில் நடு ரோட்டில் மள மளவென தீப்பிடித்து எரிந்து கார்..! - வீடியோ

published 1 year ago

கோவையில்  நடு ரோட்டில் மள மளவென தீப்பிடித்து எரிந்து கார்..! - வீடியோ

கோவை: பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து ஜவுளி எடுப்பதற்காக கோவை நோக்கி வந்த கார், ஈச்சனாரி அருகே வந்த போது திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர்  ஜவுளி எடுப்பதற்காக கோவை நோக்கி டெஸ்டர் காரில் வந்துள்ளார். அப்போது ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வரத்துவங்கியுள்ளது.

இதனால் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே இருந்த அனைவரும் கீழே இறங்கினர். இதையடுத்து காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரியத்துவங்கியதால்,  அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண : https://youtube.com/shorts/En15zlBoWZM?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe