ரத்தினபுரியில் வீடு புகுந்து நகை திருடிய இளம் பெண்..!

published 1 year ago

ரத்தினபுரியில் வீடு புகுந்து நகை திருடிய இளம் பெண்..!

கோவை: கோவை ரத்தினபுரியில் வீடு புகுந்து நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(47). டிரைவர்.

இவரது மனைவி ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த கேட்டரிங் வேலை செய்து வரும் ஐஸ்வர்யா(31) என்ற பெண்ணிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி சீனிவாசன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஐஸ்வர்யா கடன் தொகையை தருமாறு சீனிவாசனிடம் கேட்டார்.

அதற்கு அவர் தனது மனைவி அருகே உள்ள கடைக்கு சென்று விட்டார். அவரை அழைத்து வருகிறேன் என கூறி வெளியே சென்றதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் வந்தனர். பின்னர் ஐஸ்வர்யா கடன் தொகையை வாங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் சீனிவாசன் வீட்டில் இருந்த பீரோவை பார்த்த போது உடைமைகள் சிதறி கிடந்தது. மேலும் அதில் வைதிருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் ரூ. 12,500 ரொக்கம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.

புகாரில், அவர் தனது வீட்டுக்கு வந்திருந்த ஐஸ்வர்யா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யாவிடம் விசாரித்தனர். அதில், அவர்தான் நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe