செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது காதலனுடன் சண்டை கோவை கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

published 1 year ago

செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது காதலனுடன் சண்டை கோவை கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

கோவை: அரியலூர் மாவட்டம் செயங்கொண்டானைக் காவியா(19).( பெயர் மாற்றப்பட்டுள்ளது)  இவர் கோவை க.க. சாவடி அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இதற்காக யுவஸ்ரீ கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அன்புமணி (25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். தற்போது அன்புமணி சிங்கப்பூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

  இதனால் காதலர்கள் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது காவியாவுக்கும் அன்புமணிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.இதில் கோபம் அடைந்த அன்புமணி தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இந்த விவரம் அன்புமணியின் நண்பர்கள் மூலம் காவியாவுக்கு தெரியவந்தது.

இதனால் தன்னுடன் ஏற்பட்ட சண்டையால் மாத்திரை தின்ற காதலன் இறந்து விடுவார் என்று காவியா வேதனை அடைந்தார்.இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தனது அறையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்த அவரது தோழி ஒருவர் விடுதி நிர்வாகத்தினருக்குத் தகவல் கொடுத்தார்.அவர்கள் அளித்த புகாரின் பேரில் க.க. சாவடி காவல்துறை விடுதிக்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக க.க.சாவடி காவல்துறை வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe