சோமனூரில் அம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

published 2 years ago

சோமனூரில் அம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

கோவை, ஜூன்.6- கோவை சோமனூர் தொட்டிப்பாளைத்தை   சேர்ந்தவர் அலியப்பன் (வயது 72). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கோவிலை பூட்டி சம்பவத்தன்று அவர் கோவிலில் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வழக்கம் போல கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.  

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.  அப்போது மர்ம நபர்கள் கோவிலில்  இருந்த பீரோவை உடைத்து    கொள்ளை முயற்சியில்  ஈடுபட்டது தெரியவந்தது. கைரேகைகளை இதுகுறித்து அலியப்பன் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு  விரைந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். 

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து   கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட  திருடர்களை   தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe