கோவை அரசு பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் 3 - விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிடும் வாய்ப்பு!!!!

published 1 year ago

கோவை அரசு பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் 3 - விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிடும் வாய்ப்பு!!!!

கோவை: நாளை மதியம் சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட உள்ளது. இவற்றை 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாதுகாப்பான முறையில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஆகா, தீலிபன், நந்தகிஷோர், ஆல்பர், ஜாக்ஸன், மிர்ஜான் அஸ்தியா ஆகிய 5 மாணவர்கள், ஆசிரியர் சக்திவேல், கீரணத்தம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளயில் பயிலும் சாந்தனு, ஹெப்சி, ஏஞ்சல், லத்திகா, ஸ்வீட்டி குமார் ஆகிய 5 மாணவர்கள், ஆசிரியர் ஜெபலான்ஸி டெமிலா ஆகியோர் சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படும் நிகழ்வைக் காண செல்கின்றனர். 

இன்று இரவு கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் செல்லும் இவர்கள் சென்னையில் இருந்து வேன் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா சென்றடைகிறார். அங்கு சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படும் நிகழ்வை பார்வையிடும் மாணவர்கள், அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள மியூசியத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe