சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம்.

published 1 year ago

சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம்.

கோவை  : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவார் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்மந்தமாகவும் விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வு மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவையில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு போக்குவரத்துக் கழகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக பொது பயன்பாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகள் சார்ந்த புத்தாக்க பயிற்சி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை உயிர் அமைப்புடன், மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe