பீளமேட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி..!

published 1 year ago

பீளமேட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி..!

கோவை :  கோவை பீளமேடு ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தை சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ரெயிலில் அடிபட்டு இறந்து நபர் நீல கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். வலது கையில் பரமசிவம் வீரம்மாள் என பச்சை குத்தி இருந்தார்.

பின்னர் போலீசார் ஆணின் உடலை மீட்டு  கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்த ஆண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe