மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்க கோரி செம்மேடு பொதுமக்கள் மனு!

published 1 year ago

மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்க கோரி செம்மேடு பொதுமக்கள் மனு!

கோவை  : கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் NGR வீதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்த நிலையில் தற்போது குழந்தைகள் எண்ணிக்கை குறைவு எனக் கூறி அங்கன்வாடி மையத்தை மூடியதாக தெரிகிறது. 

இதன் காரணமாக செம்மேடு கிராமத்தில் காந்தி காலனி, NGR வீதியில் உள்ள குழந்தைகள் இந்த வருடம் அங்கன்வாடி மையத்தில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இப்பகுதியில் உள்ள தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை மறுபடியும் திறக்க வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி அங்கன்வாடி மையத்தை விரைவில் திறந்து குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் பயனடைய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe