15 ரூபாய்க்கு பெட்ரோல்.. அனுமதி கோரி உண்ணாவிரதம் செய்யும் ராமர்பிள்ளை..!

published 1 year ago

15 ரூபாய்க்கு பெட்ரோல்.. அனுமதி கோரி உண்ணாவிரதம் செய்யும் ராமர்பிள்ளை..!

தமிழ்நாடு :

தமிழ்நாட்டை மட்டுமில்லாமல் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தவர் ராமர்பிள்ளை. தான் குறைந்த விலையில் மூலிகை பெட்ரோல் தயாரித்துள்ளதாக கூறி நாட்டையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருந்த நேரத்தில் 15 ரூபாய்க்கு பெட்ரோல் தருவேன் என்றால் சும்மாவா.? இதனால், அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது.

இந்நிலையில், மூலிகை பெட்ரோலை பயன்படுத்த ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அரசு அனுமதிக்க வேண்டும் என்று ராமர் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். தான் கண்டுபிடித்த எரி பொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தினால் புகை வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த மூலிகை பெட்ரோலை வெறும் ரூ.15க்கு (ஒரு லிட்டர்) வழங்குவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். மூலிகைப் பெட்ரோலை பயன்படுத்த அரசு அனுமதிக்கும் வரை தண்ணீர் அருந்தாமல், சாப்பிடாமல் இருப்பேன் என தெரிவித்தார்.

எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள் முன் நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe