கோவையில் ரேஷன் கடை 3 நாள் போராட்டத்தை தவிர்த்த ஊழியர்கள்

published 2 years ago

கோவையில் ரேஷன் கடை 3 நாள் போராட்டத்தை தவிர்த்த ஊழியர்கள்

கோவை, ஜூன்.8- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நிதி செலவானதால், அரசு ஊழியர்களுக்கு 2020-ல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அகவிலைப்படி 2021-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 11 சதவீதம் அகவிலைப் படி உயர்வு வழங்கியது. மீண்டும் ஜூலை மாதம், 3 சதவீதம் அக விலைப்படி உயர்வை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை, 17 சதவீதத்தில் இருந்து, 31 சதவீதமாக அரசு உயர்த்தி உத்தரவிட்டது.

ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, இந்த அகவிலைப்படியை வழங்கவில்லை.இதனால் தங்களுக்கும் அக விலைப்படி உயர்வு கேட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
போராட்டம் இந்தநிலையில்  அகவிலைப்படியை உயர்த்தக்கோரி, ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஆனால் கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் யாரும்,  இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில், எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தை, பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe