சிங்காநல்லூரில் ஆள்மாறி முதியவரை கடத்திய கும்பல்.. தெரிந்ததும் நடு வழியில் இறக்கிவிட்டு எஸ்கேப்..!

published 1 year ago

சிங்காநல்லூரில் ஆள்மாறி முதியவரை கடத்திய கும்பல்.. தெரிந்ததும் நடு வழியில் இறக்கிவிட்டு எஸ்கேப்..!

கோவை: கோவை சிங்காநல்லூரில் முதியவரை காரில் கடத்திய கும்பல் ஆள் மாறியதால் அவரை இறக்கி விட்டு சென்றனர்.

கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(67). மார்க்கெட்டிங் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி ரோடு நஞ்சப்பா நகர் அருகே நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு இன்னோவா காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவரை காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டார். எதற்காக என்னை கடத்தினீர்கள் என சத்தம் போட்டார். அப்போது அந்த கும்பல் உன் பெயர் கந்தசாமிதானே என கேட்டனர். அவர் இல்லை என்று சொல்லியும் நம்பாத அந்த கும்பல் அவரது ஆதார் கார்டை வாங்கி பார்த்தனர்.

அதில் மனோகரன் என இருந்தது. இதனால் அந்த கும்பல் அவரை எல்அண்டி பைபாசில் உள்ள கல்லூரி அருகே இறக்கி விட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கந்தசாமி என்பவருக்கு பதிலாக மனோகரனை அந்த கும்பல் கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து கந்தசாமி என்பவர் யார்? அவரை அந்த கும்பல் கடத்த வந்ததற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதியவரை காரில் கடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe