கோவையில் ரூ.1,300 கோடி 'மெகா' மோசடி : மேலும் 3 பேர் கைது

published 1 year ago

கோவையில் ரூ.1,300 கோடி 'மெகா' மோசடி : மேலும் 3 பேர் கைது

கோவை: கோவையில் நிதி நிறுவனம் நடத்தி 1,300 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ்(30). இவர் பீளமேட்டில் யு.டி.எஸ்., என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012 ம் ஆண்டு துவங்கினார்.  கோவையில் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் கிளைகளை விரிவு படுத்தினார். பின் அவர் நிறுவனம் சார்பில், 4 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்.

இதனை நம்பி அந்த நிதி நிறுவனத்தில், 76,597 பேர் ரூ.1,300 கோடி முதலீடு செய்தனர். இந்நிலையில் மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் மோசடி செய்தார். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்தனர். இந்நிலையில் தலைமறைவான ரமேஷ் கடந்த, ஜூன் மாதம் 6ம் தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அவரது நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில், 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 16 லட்சம் மீட்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும், யு.டி.எஸ்., நிறுவனம் மற்றும் ரமேசுக்கு சொந்தமான, 10 இடங்களில் உள்ள வீடு, நிலம் உட்பட ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்த போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 

மேலும் தலை மறைவாக இருந்த ரமேஷின் அம்மா லட்சுமி, அப்பா கோவிந்தசாமி மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகிய மூன்று பேரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe