கோவையில் கத்திமுனையில் பணம் பறித்த சிறுவன்

published 1 year ago

கோவையில் கத்திமுனையில் பணம் பறித்த சிறுவன்

கோவை: கோவையில் கத்திமுனையில் பணம் பறித்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(27). டூ வீலர் மெக்கானிக்.

இவர் நேற்று முன்தினம் இரவு தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியது. அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 850ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்தி முனையில் பணம் பறித்தது சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகத் ஹரி(20), விஷாகன்(22), பிரதீப்(26) மற்றும் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe