கோவையில் மகளை கிண்டலடித்தவர்களை தட்டிக்கேட்ட தந்தை மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல்

published 1 year ago

கோவையில் மகளை கிண்டலடித்தவர்களை தட்டிக்கேட்ட தந்தை மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல்

கோவை:  கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேந்திரன்(43). தூய்மைப்பணியாளர். சம்பவத்தன்று இவரது மகள் வீட்டிற்கு வெளியே குப்பை கொட்ட சென்றார். 

அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் அவரை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே அவர் 2 வாலிபர்களையும் கண்டித்து தட்டிக்கேட்டார். 

இதனால் அவர்களுக்கு முன் விரோதம் உருவானது. இந்நிலையில், நேற்று சுரேந்திரன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் சுரேந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டை மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கினார். 

இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. வலியால் அவர் சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இரண்டு வாலிபர்களுடன் சுரேந்திரனை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 
இது குறித்து சுரேந்திரன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் அதேபகுதியை சேர்ந்த கிஷோர், பாபு ஆகிய இரண்டு வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe