கோவையில் வீட்டில் புகுந்து 500 ரூபாய் திருடி மாட்டிக் கொண்ட வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

published 1 year ago

கோவையில் வீட்டில் புகுந்து 500 ரூபாய் திருடி மாட்டிக் கொண்ட வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை: கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியை சேர்ந்தவர் ராஜ்(37). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று தனது வீட்டில் இருந்தார். அப்போது நைசாக வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் டேபிளில் இருந்த ரூ. 500 ஐ திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பணம் திருடியது கூலி தொழிலாளி வால்பாறையை சேர்ந்த அலெக்ஷாண்டர்(31) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe