அடையாளம் தெரியாத வாலிபர் விபத்தில் பலி

published 1 year ago

அடையாளம் தெரியாத வாலிபர் விபத்தில் பலி

கோவை: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு ஆத்துப்பாலம் அருகே நேற்று வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி வாலிபர் மீது மோதி விட்டுபு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் கிடைக்கவில்லை.

இது குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியானவர் யார்? அவர் மீது மோதி சென்ற லாரி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe