கனமழையால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

published 1 year ago

கனமழையால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: நீலகிரி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பருவமழை காரணமாக சமீபகாலமாக மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்ட பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர்  அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணை முழுவதும் தண்ணீர்நிரம்ப உள்ளதால் பவானி ஆற்றில் பெரும் பிரச்னை ஏற்படுகிறது.

பில்லூர் அணைக்கு மிக வேகமாக தண்ணீர் செல்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 89 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்துள்ளது. இந்த தண்ணீர் அனைத்தும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் நிரம்பி பவானி ஆற்றில் கலக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

அணையில் 100 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும் என்பதால், அந்த இடத்தை அடைந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe