எலக்ட்ரீசியன் தூக்கில் தற்கொலை

published 1 year ago

எலக்ட்ரீசியன் தூக்கில் தற்கொலை

கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(29). எலக்ட்ரீசியன். இவர் மனைவி, குழந்தையுடன் உடையாம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

அஜித்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் புலியகுளம் கொண்டசாமி லே-அவுட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று காலை அவரது தாய் கீதா வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த அஜித்குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கீதா தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார்.

தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe