கோவை சிங்காநல்லூரில் மின்வாரியத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

published 1 year ago

கோவை சிங்காநல்லூரில் மின்வாரியத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

கோவை : கோவையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து தப்பி சென்ற மர்ம  நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 கோவை அருகே உள்ள உப்பிலிபாளையம் கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் அற்புதராஜ் (58). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அற்புதராஜ் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். அப்போது இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ. பத்தாயிரம் ரொக்கபணம், 3 வெள்ளி டம்ளர்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர். 

சுற்றுலா முடிந்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அற்புதராஜ் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். 

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe