சாய்பாபா காலனியில் பேராசிரியை வீட்டில் 29 பவுன் நகைகள் பணம் கொள்ளை

published 1 year ago

சாய்பாபா காலனியில் பேராசிரியை வீட்டில் 29 பவுன் நகைகள் பணம் கொள்ளை

கோவை: கோவை சாய்பாபா காலனி 8வது வீதியை சேர்ந்தவர் குரு ஞானாம்பிகை (வயது47).  இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் .‌கடந்த மாதம் இவர் தனது வீட்டில் இருந்து ஒரு விழாவிற்கு சென்றார்.  அப்போது இவர் தங்க நகைகளை அணிந்து சென்றார் . 

திரும்ப வீட்டுக்கு வந்த குரு ஞானாம்பிகை நகைகளை கழற்றி பீரோவில் வைத்து இருந்தார் .  சம்பவத்தன்று இவர் தனது நகைகளை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது.  இது குறித்து குரு ஞானாம்பிகை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார் .

 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .‌ மேலும் குரு ஞானாம்பிகை  அவரது வீட்டிற்கு சுத்தம் செய்வதற்காக வந்த 2 பெண்கள் நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe