கோவையில் பண்டிகை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

published 1 year ago

கோவையில் பண்டிகை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கோவை: ஆடி வெள்ளி, மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களான 28,29,30 ஆகிய நாட்களில் கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக 
மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக 28ம் தேதியான நாளை ஆடி வெள்ளி, 29ம் தேதி மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை  ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து

மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe