பொள்ளாச்சியில் 65 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபர்

published 2 years ago

பொள்ளாச்சியில் 65 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபர்

கோவை,ஜூன்.9- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்த 65 வயது மூதாட்டி. தொழிலாளி
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ேதாட்டத்தில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் மாடுகளை தோட்டத்தில் கட்டி வைப்பதற்காக சென்றார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 25). கட்டிட தொழிலாளி. குடிபோதையில் வந்தார்.

பலாத்காரம் அவர் திடீரென தான் அணிந்து இருந்த வேட்டியை கழற்றி மூதாட்டியின் முகத்தில் மூடினார். இதனையடுத்து அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்தார். பின்னர் நாகராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார். வீட்ற்கு சென்ற மூதாட்டி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது மனைவியை ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விசாரணை இது குறித்து நெகமம் போலீசில் மூதாட்டியின் கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக உள்ள கட்டிட தொழிலாளி நாகராஜை நெகமம் போலீசார் தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe