கோவையில் ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ. 14 லட்சம் மோசடி 

published 1 year ago

கோவையில் ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ. 14 லட்சம் மோசடி 

கோவை : கோவையில் ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ. 14 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஓம்நகர் சிவாஜி காலணியைச் சேர்ந்தவர் தீபக்(22). இவர் கார், பைக்கிற்கு வாட்டர் வாஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்குக் கடந்த மாதம் குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தீபக் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார். 

அதில் தனது விவரங்களைப் பதிவிட்டார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் தாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து கொடுத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும், கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறினார். இதனையடுத்து தீபக் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு முதலில் சிறிய தொகையை அனுப்பி அவர்களின் பணிகளை ஆன்லைனில் செய்து கொடுத்தார். 

அப்போது அவருக்குக் குறிப்பிட்ட தொகை லாபம் கிடைத்தது. பின்னர் தீபக்கைத் தொடர்பு கொண்ட நபர் அதிகளவில் முதலீடு செய்தால் இதனை விட அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீபக் சிறிது, சிறிதாக ரூ. 14,12,500 முதலீடு செய்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு எந்த விதமான கமிஷனும், லாப தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ஆன்லைன் வேலை எனக் கூறி மொத்தமாக ரூ. 14,12,500 சுருட்டி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe