கோவையில் இன்ஜினியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

published 1 year ago

கோவையில் இன்ஜினியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை : கோவை நேருநகர் கிருஷ்ணாபார்க் பகுதியைச் சேர்ந்தவர் கோபி(40). பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் வேலை காரணமாகச் சென்னை சென்றார். வீட்டில் அவரது மனைவி இருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் அவரது மனைவி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ள நுழைந்த மர்ம நபர் தரைத்தளத்தில் உள்ள மற்றொரு அறையில் அலமாரியில் வைத்திருந்த 2 1/4 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 45 ஆயிரத்தைத் திருடித் தப்பிச் சென்றார்.

 இதனையறிந்த அவரது மனைவி தனது கணவருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மேலும் அங்குப் பதிவாகியிருந்த 2 கைரேகை பதிவுகளைக் கைப்பற்றி போலீசார் நகை மற்றும் பணம் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe