கோவையில் காதல் திருமணம் செய்த 6 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை

published 2 years ago

கோவையில் காதல் திருமணம் செய்த 6 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை

கோவை, ஜூன்.9- சேலம் வாலபாடிஎழில்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கோவை அன்னூர்  அடுத்த அச்சம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக வேலை செய்து வந்தார். குடும்ப தகராறு
இவர் மரியம் ஹேமா என்பவரை காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர் சமதத்துடன் கடந்த 3-ந் தேதி மரியம் ஹேமாவை திருமணம் செய்து கொண்டார்.

குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கினர். இந்தநிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட தொடங்கியது. இதனால் கார்த்திக் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
தூக்குப்போட்டு சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார்த்திக் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சோகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக்கின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து 6 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe