கோவை வாலிபரை நூதன முறையில் ஏமாற்றி ரூ. 10.65 லட்சம் மோசடி

published 1 year ago

கோவை வாலிபரை நூதன முறையில் ஏமாற்றி ரூ. 10.65 லட்சம் மோசடி

 கோவை : கோவையில் அதிக கமிஷன் தருவதாகக் கூறி வாலிபரிடம் ரூ. 10.65 லட்சம் நூதன மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சின்னியம்பாளையம் பிஎல்எஸ் நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன்(30). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அதில் உள்ள லிங்க் கை கிளிக் செய்து சாமிநாதன் தனது விவரங்களைப் பதிவு செய்தார். 

தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை கார்த்திகா என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தங்களது நிறுவனத்தில் இணையதளத்தைப் பின்பற்றி அதில் உணவு சம்பந்தமாக ரிவ்யூ கொடுத்தால் அதிக கமிஷன் கிடைக்கும் எனவும் சிறிது முதலீடு செய்தால் போதும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய சாமிநாதன் முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் செலுத்தி அவர்கள் கொடுத்த பணிகளை முடித்துக் கொடுத்தார்.

 அதற்கு அவருக்குச் சிறிதளவு கமிஷன் தொகை கிடைத்தது. பின்னர் சாமிநாதனைத் தொடர்பு கொண்ட கார்த்திகா அதிகளவில் முதலீடு செய்தால் அதிகமான தொகை லாபமாகக் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து சாமிநாதன் சிறிது, சிறிதாக அவர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 10,65,118 அனுப்பினார். ஆனால் அதன்பின்னர் சாமிநாதனுக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

மொத்தமாக ரூ. 10.65 லட்சம் மோசடி செய்து விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த சாமிநாதன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe