கோவையில் வெவ்வேறு இடங்களில் 6 பவுன் நகை மர்ம நபர்களால் திருட்டு 

published 1 year ago

கோவையில் வெவ்வேறு இடங்களில் 6 பவுன் நகை மர்ம நபர்களால் திருட்டு 

கோவை : கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்களில் 6 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் நடராஜன் மனைவி மல்லிகா(57). இவர் தேவாங்கபேட்டையில் உள்ள பள்ளியில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மல்லிகா வேலைக்குச் செல்வதற்காக பஸ்சில் தேவாங்கபேட்டை சென்றார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் நைசாக மல்லிகா கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

கோவை சேரன் மாநகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி பிரேமலதா(57). இவர் நேற்று தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பிரேமலதா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். இது குறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe