கோவை, சென்னை விமான நிலையங்களில் 20 கிலோ தங்கம் பறிமுதல்

published 1 year ago

கோவை, சென்னை விமான நிலையங்களில் 20 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை, : கோவை, சென்னை  விமான நிலையம் மற்றும் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில்  மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை  செய்தனர். இதன் மூலம்  இருபது கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடல் வழியாகத் தங்கக்கட்டிகள்  கடத்தப்பட்டு வந்துள்ளது. இதே போன்று இலங்கையிலிருந்து  தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு ராமேஸ்வரம், தனுஷ் கோடி 
வழியாகக் கடத்தி வந்த இரண்டு படகுகளை அதிகாரிகள் தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் கடற்கரையில் பிடித்தனர்.

இதனைக் கடத்தி வந்த கடத்தல்காரர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதே போன்று கோவை, சென்னை விமான நிலைகளிலும் சோதனை செய்யப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

இந்த கடத்தலில் ஈடுபட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe