கோவையில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உட்பட 2 பேரிடம் செயின் பறிப்பு

published 1 year ago

கோவையில்  வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உட்பட 2 பேரிடம் செயின் பறிப்பு

கோவை : கோவையில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உட்பட 2 பேரிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் ஸ்ரீஹரிணி(19). இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரி முடிந்து ஸ்ரீஹரிணி தனது அறைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த வைர டாலருடைய 2 பவுன் தங்க செயினை நைசாக பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீஹரிணி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

இதேபோல், கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அங்கண்ணன் மனைவி சுகந்தி(39). இவர் நேற்று மளிகைப்பொருட்களை வாங்கி விட்டு தனது கணவருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவர்கள் பெரியகடைவீதியில் சென்ற போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். புகாரின் பேரில், கடைவீதி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe