ராகுல் காந்திக்கு எதிரான 2 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு உச்ச நீதிமன்றம் அதிரடி.

published 1 year ago

ராகுல் காந்திக்கு எதிரான 2 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு உச்ச நீதிமன்றம் அதிரடி.

இந்தியா :  குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.

 இதையடுத்து, 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?.

 தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரைத் தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பதிலாக ஒரு நாட்கள் குறைவாகத் தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் வந்திருக்காது.

 அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறைத் தண்டனை குறித்த விளக்கம் இல்லை எனக் கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

 மேலும் மக்களவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe