கோவையில் பள்ளி பேருந்து மோதி வாலிபர் பலி

published 1 year ago

கோவையில் பள்ளி பேருந்து மோதி வாலிபர் பலி

கோவை: கோவை காந்திநகர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் நிரஞ்சன்(20). இவர் நேற்று பீளமேடு அவினாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த பள்ளி பேருந்து பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நிரஞ்சனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

இந்த விபத்து தொடர்பாகக் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் செந்தில்குமார்(41) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe