சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்கள் ஒத்திகை

published 1 year ago

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்கள் ஒத்திகை

கோவை : சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள அரசு சார்பில் மாவட்டங்களில் தோறும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏதேனும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் உட்பட பல்வேறு செயல்களில்  சிறந்து விளங்கிய நபர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

அதன்படி கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவார். அதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டுக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்பினரும் கலந்து கொள்வர்.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி கோவையைச் சேர்ந்த பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி நேரில் பார்வையிட்டார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe