கோவை வாலிபரை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது

published 1 year ago

கோவை வாலிபரை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது

கோவை : கோவையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் மகேஷ்குமார்(38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ராஜீவ்காந்தி ரோடு ஒத்தபுளியமரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 6 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். அதில் கத்தி முனையில் பணம் பறித்தது கோவை கணபதி சங்கனூர் ரோட்டை சேர்ந்த கவுதம்(21), கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், பிகாம் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் அருள் குமரன்(19) மற்றும் நாகராஜ் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கவுதம், அருள் குமரனை கைது செய்து சிறையிலும், 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். தலைமறைவான நாகராஜை தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe