கோவையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

published 1 year ago

கோவையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை : நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

 இதனையொட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்  தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் 

கோவை மாநகர, மாவட்ட போலீசார் 109 பேர்,  அரசு அலுவலர்கள் 153 பேர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மொழிப் போராட்ட தியாகிகள் 4 பேர் என மொத்தம் 281 பேருக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டிஐ ஜி சரவண சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ் சண்முகம் மதிவாணன் சுகாஷினி, மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe