கோவையில் இரும்பு ராடை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

published 1 year ago

கோவையில் இரும்பு ராடை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

கோவை : கோவை அடுத்த மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்தவர் தீபக் ஈஸ்வரன்(20). இவர் கோவை குனியமுத்தூர் பிகே புதூரில் அறை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி தனியார் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் அறையில் இருந்தார். 

அப்போது அங்கு வந்த சிலர் தீபக் ஈஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இரும்பு ராடால் மிரட்டி அவர்களிடம் இருந்த 4 செல்போன்களை பறித்துத் தப்பினர். இது குறித்து தீபக் ஈஸ்வரன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன்களை பறித்துச் சென்ற குனியமுத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதாம் உசேன்(31), திட்டக்குடியைச் சேர்ந்த சரவணன்(18), கல்லூரி மாணவர்கள் சேலம் காக்கா பாளையத்தைச் சேர்ந்த ஷெல்டன்(20) மற்றும் மதுரையைச் சேர்ந்த ஹரீஸ்(20) ஆகிய 4 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe