கோவை சிங்காநல்லூரில் பரிதாபம் மின் கம்பத்தில் தொங்கியபடி உயிரிழந்த ஊழியரால் பரபரப்பு

published 1 year ago

கோவை சிங்காநல்லூரில் பரிதாபம் மின் கம்பத்தில் தொங்கியபடி உயிரிழந்த ஊழியரால் பரபரப்பு

கோவை: கோவை சிங்காநல்லூர் என்.ஆர்.ஆர். லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் (26). மின்வாரிய ஒப்பந்த ஊழியர். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மின் கம்பத்திலேயே மயங்கி மேலேயே தொங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது திடீர் உடல்நலக் குறைவால் இறந்தாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe