கோவையில் கார் சர்வீஸ் சென்டரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

published 1 year ago

கோவையில் கார் சர்வீஸ் சென்டரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

கோவை : கோவையில் வாகனம் சர்வீஸ் சென்டரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடிய ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிவானந்தபுரம் திருவாசகர் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை(46). இவர் அதே பகுதியில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு வடமாநில தொழிலாளிகள் சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அண்ணாமலை ஊழியர்களைப் பணி செய்யச் சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றார். 

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அங்கிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான என்ஜின் ஸ்கேனர் மற்றும் டூல்ஸ் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஊழியர்களிடம் விசாரித்தார். அதில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ரோகன்கான்(48) மற்றும் ரோகன்கானின் உறவுக்கார வாலிபர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாமலை சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ரோகன்கான் உட்பட 2 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe