ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை , கோவையில் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

published 1 year ago

ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை , கோவையில் கொண்டாடிய  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை : ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது. 

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரைக் கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. 

ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்குச் சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைத் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் அங்குத் திரண்டிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe