கோவையில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு

published 1 year ago

கோவையில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு

கோவை : ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ராகுல் சாரதி(21). இவர் கோவையில் நண்பர்களுடன் தங்கி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ராகுல் சாரதி தனது நண்பர் ஒருவருடன் நவ இந்தியா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராகுல் சாரதி கையிலிருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து ராகுல் சாரதி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe