கோவையில் மது குடிக்கப் பணம் கேட்டு வாலிபரைக் கத்தியால் குத்திய 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் மது குடிக்கப் பணம் கேட்டு வாலிபரைக் கத்தியால் குத்திய 2 பேர் கைது

கோவை : கோவைப்புதூரை சேர்ந்தவர் எஸ்தர் ராஜா (33), டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் குடிபோதையிலிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மது குடிக்கப் பணம் தருமாறு எஸ்தர் ராஜாவை மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் எஸ்தர் ராஜாவைக் குத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். 

இதில், எஸ்தர் ராஜாவுக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில், எஸ்தர் ராஜாவிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியது மதுரையைச் சேர்ந்த சமையல் வேலை செய்து வரும் பாஸ்கரன் (26), திருப்பூர் அவினாசி நகரைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் முருகானந்தம் (49) என்பது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe