கோவையில் உள்ள 5 லட்சம் வீடுகளில் QR Code ஸ்டிக்கர் ஒட்டப்போறங்க..!

published 1 year ago

கோவையில் உள்ள 5 லட்சம் வீடுகளில் QR Code ஸ்டிக்கர் ஒட்டப்போறங்க..!

கோவை : கோவையில் மக்களின் வசதிக்காக QR code மூலம் எளிமையாக எந்தவித சிரமமும் இல்லாமல் மாநகராட்சி வரிகளைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த QR code ஸ்டிக்கர் கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட இருக்கிறது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட் போன் வழியே சொத்து வரி, குடிநீர் வரிகளைச் செலுத்தலாம். அதுமட்டும்  இல்லாமல் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை தொடர்பான புகார் ஏதேனும் தெரிவிக்க இந்த QR code - ஐ ஸ்கேன் செய்தால் போதும் புகார் பதிவு செய்யப்படும்.

இந்த QR கோடில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனி அடையாள எண் வழங்கப்படும். அது அந்த வீட்டு உரிமையாளரின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும். இதனால் செலுத்தப்படும் வரி, புகார் அனைத்தும் நேரடியாக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

கோவையில் இதற்கான முன்னேற்பாடாக 5 லட்சம் ஸ்டிக்கர்ஸ் தயாராக உள்ளது. விரைவில் இது ஒட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe